மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்படலாம் என பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தின் முதல்வராக இயங்கி வருபவர், மம்தா பானர்ஜி. இவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இவர் விளங்கிவருகிறார். இந்நிலையில், பாஜக தலைவர்களின் பேச்சுகள் மம்தா பானர்ஜி கைது செய்யப்படலாம் என்ற யூகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மூத்த தலைவர் சுகந்தா மஜீம்தார் பேசுகையில், ‘திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு தற்போது 41 தலைவர்களின் பெயர்கள் அடிபடுகிறது. மேலும், மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்படலாம்வரும் டிசம்பரில் மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சி கவிழ்ந்துவிடும்.’ என்றார்.
இவர் மட்டுமல்லாது பாஜகவின் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் மிதுன் சக்ரவர்த்தி, ‘ மம்தா பானர்ஜி கட்சியை சேர்ந்த 21 ஏம்ஏல்ஏக்களுடன் பேசி வருகிறேன். சிறிது காலம் காத்திருங்கள் உரிய நேரம் விரைவில் வரும் என்றார்.
இதையும் படிங்க: தி.மு.க. பொதுக்குழு தேர்தல்… வெளிவந்த அறிவிப்பு