Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅசாமில் நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள்!

    அசாமில் நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள்!

    அசாமில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அசாம் மாநிலத்தின் கம்ரூப் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆகப் பதிவாகியுள்ளது. 

    மேலும், இன்று அதிகாலை 3:59 மணிக்கு கம்ரூப் மாவட்டத்தில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. முன்னதாக, பிப்ரவரி 28 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்டத்தில் 4.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

    இந்த நிலநடுக்கமானது பிப்ரவரி 28 மதியம் 3:21 மணியளவில் 10 கிமீ ஆழத்தில் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதோடு, துருக்கியில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50,000-த்திற்கு மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

    காதலித்து மோசடி செய்த காதலன் உயிரிழப்பு; தற்கொலையா? கொலையா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....