உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு தற்போது நடைபெற்று வருகிறது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படியே, தற்போது ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதைத்தொடரந்து, ஜல்லிக்கட்டு தொடங்கியது. இப்போட்டியில், காளைகளை அடக்க 355 இளைஞர்கள் முறைப்படி பதிவு செய்துள்ளனர்.
முதலில் ஐய்யனார் கோயில் காலை உள்பட கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் காளைகள் அவிழ்க்கப்பட்டு வருகின்றன.
பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்படுகிறது.
மேலும், வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கக் காசு, ரொக்கப் பரிசு, இருச்சக்கர வாகனம், சைக்கிள், பீரோ, வீட்டு உபயோகப் பொருட்கள் எனப் பல்வேறு கண்கவர் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
விராட் கோலியின் அசத்தல் ஆட்டத்தால் துவண்ட இலங்கை அணி..