குஜராத்தில் நாளை நடைபெறும் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியை இருநாட்டு பிரதமர்களும் காணவுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலிய அணி தற்போது வரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியானது நாளை ஆகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிப்பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி செல்லும் வாய்ப்பு பிராகசமடையும். இதனால் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசி, பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து கடைசி டெஸ்ட்டின் முதல் நாள் போட்டியை காணவுள்ளார்.
இதனால், இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசி, பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து கடைசி டெஸ்ட்டின் முதல் நாள் போட்டியை காணவுள்ளார்.
விமானப்படை தாக்குதல் பிரிவில் தளபதியாக பெண் நியமனம்; வரலாற்று நிகழ்வு!