கொளத்தூர் தொகுதி சீட் பெற்றுத்தர கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ வெளியிட்டு புகார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பிரிந்து தற்போது இரண்டு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், இபிஎஸ் தரப்பு ஆதரவாளரான கே.பி.முனுசாமி மீது ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி புகார் ஒன்றை அளித்து இருக்கிறார்.
அதிமுக நிர்வாகிகள் நியமனத்துக்கு கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டதாக ஓபிஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோவில், ‘முதலில் 50 தயார் செய்துள்ளேன். மாலைக்குள் மீதி ஐம்பதை தயார் செய்கிறேன்’ என கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, கே.பி.முனுசாமியிடம் சொல்கிறார். பிறகு, பணத்தை வாங்க தனது மகனை அனுப்புவதாக கே.பி.முனுசாமி கூறுகிறார்.
இந்நிலையில், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று சென்னை க்ரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், ‘கொளத்தூர் தொகுதியில் போட்டியிட கே.பி.முனுசாமி தன்னிடம் ரூ.1 கோடி கேட்டதாகவும், ஈபிஎஸ்-க்கு இது தெரிய வேண்டாம் என கே.பி.முனுசாமி கூறியதாகவும் தெரிவித்தார்.
ஓபிஎஸை தரம் தாழ்த்தி பேசுவதால் தற்போது இதை வெளியிடுவதாகவும், அமைதியாக இல்லை என்றால் வீடியோவை வெளியிட உள்ளதாக தெரிவித்த கிருஷ்ணமூர்த்தி, தனது ஆடியோவுக்கு பதில் கூறாவிட்டால் தங்கமணி, வேலுமணி குறித்த வீடியோவையும் வெளியிடுவதாக பரபரப்பு குற்றம்சாட்டினார்.
காந்தாரா நடிகருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்!