உத்தரகண்ட் கேதார்நாத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் குகைக்கோயில் ஒன்றுள்ளது. இந்த கோயில் உலகளவில் மிகவும் பிரபலமானதாகும். ஆதலால், இந்த கோயிலுக்கு வருடந்தோறும் பக்தர்கள் வருவது வாடிக்கையான ஒன்றே.
குகைக்கோயில் செல்பவர்கள், ஹெலிகாப்டர் மூலம், பேருந்துகள் மூலம், நடைபயணம் மூலம் செல்வர். அந்த வகையில் நேற்று உத்தரகண்ட் மாநிலம் பாதாவிலிருந்து கேதார்நாத்துக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் நேற்று திடீரென விபத்திற்குள்ளானது. ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், ஒருவர் காயமடைந்து ,சிகிச்சை பெற்ற நிலையில் அவரும் உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் 7 பேரும் பலியாகியுள்ளதாக உத்தரகண்ட் காவல்துறை தகவல் தெரிவித்தது.
தற்போது, உயிரிழந்தவர்களில் பிரேம்குமார் (63), கலா (50), சுஜாதா (56) ஆகிய மூவரும் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மழை பொழிய வேண்டுதல்.. ‘அசைவ உணவு படையல் திருவிழா’ கொண்டாட்டம்!