Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஹாலிவுட்டிற்கு செல்கிறதா காந்தாரா? - உண்மை என்ன?

    ஹாலிவுட்டிற்கு செல்கிறதா காந்தாரா? – உண்மை என்ன?

    காந்தாரா திரைப்படத்தை ஆங்கிலத்தில் டப் செய்து வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    சமீப காலமாகவே கன்னடத்தில் வெளிவரும் திரைப்படங்கள் இந்திய அளவில் நற்பெயரை சம்பாதித்து வருகின்றது. உதாரணத்திற்கு கே.ஜி.எஃப், 777 சார்லி போன்ற திரைப்படங்களை சொல்லலாம். இந்த வரிசையில் இணைந்த திரைப்படம், காந்தாரா. இத்திரைப்படத்தை கே.ஜி.எஃப் திரைப்படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

    ரிஷப் ஷெட்டி, சப்தமி கௌடா, மானசி, கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் காந்தாரா திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி கன்னட மொழியில் மட்டும் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, அடுத்த சில நாள்களில் டப் செய்யப்பட்டு முக்கிய மொழிகளில் வெளியிடப்பட்டது. 

    இத்திரைப்படத்தை ரஜினிகாந்த், தனுஷ் உட்பட பல திரையுலக பிரபலங்களும்  பாராட்டி பேசினர். 16 கோடி அளவில் தயாரான இத்திரைப்படம் 375 கோடி வசூல் செய்து அசத்தியது. 

    இந்நிலையில், காந்தாரா திரைப்படத்தை ஆங்கிலத்தில் டப் செய்து வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்திய அளவில் காந்தாரா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க, ஆங்கிலத்தில் டப் செய்தால் பிற நாடுகளில் இருந்தும் வரவேற்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாலயே படக்குழு இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

    முன்னதாக, காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    சந்தைக்கு வந்த புது ரியல்மி மொபைல்; சிறப்பம்சங்கள் என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....