Sunday, March 17, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்சந்தைக்கு வந்த புது ரியல்மி மொபைல்; சிறப்பம்சங்கள் என்ன?

    சந்தைக்கு வந்த புது ரியல்மி மொபைல்; சிறப்பம்சங்கள் என்ன?

    பிரபல எலக்ட்ரானிக் நிறுவனம் ரியல்மி, குளிர்பான நிறுவனமான கோக கோலாவுடன் இணைந்து ரியல்மி 10 புரோ கோக் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 

    சீனாவை தாயகமாகக் கொண்ட ரியல்மி நிறுவனம் தயாரிக்கும் மொபைல்களுக்கு இந்தியாவில் பெரும் ரசிக கூட்டம் உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பாரக்கப்படுவது, ரியல்மி பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்வதுதான். 

    இந்நிலையில், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ரியல்மி 10 புரோ கோக் எடிஷன் விற்பனைக்கு வந்தது. இந்த மொபைலின் சிறப்பம்சங்களாக, ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் பார்க்கப்படுகிறது. 

    மேலும், இந்த மொபைலில் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், 6.72 இன்ச் திரை அளவு கொண்ட டிஸ்பிளே, பின்பக்கத்தில் இரண்டு கேமரா. அதில் 108 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா. 

    அதேநேரம், 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா உடன் கோக் நிறுவனத்தின் டிரேட்மார்க் சிவப்பு நிற டிசைன் உடன் கருப்பு நிறம் சேர்த்து இந்த போன் வெளியாகியுள்ளது.

    மேலும், இந்த மொபைலில் 5,000mAh பேட்டரி, 33 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ள இந்த போனின் விலை ரூ.20,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    விஜய்யின் லியோ பட படப்பிடிப்பில் தீவிர கட்டுப்பாடு – உஷாரான படக்குழு!

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....