Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி வன்முறையாளர்களை கண்டறிய சிறப்புப் புலனாய்வுக் குழு

    கள்ளக்குறிச்சி வன்முறையாளர்களை கண்டறிய சிறப்புப் புலனாய்வுக் குழு

    கள்ளக்குறிச்சி வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறிய சிறப்புப் புலனாய்வுக் குழு தமிழகக் காவல்துறையால் நியமிக்கப்பட்டுள்ளது. 

    கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்த மாணவி ஶ்ரீமதி கடந்த 13-ம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக, நான்கு நாள்களாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததற்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 500-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து, 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் மறியல் நடைபெற்ற இடத்தில் உடனடியாக குவிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே, மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததற்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினரும் அந்த பள்ளி அருகே, கடந்த ஞாயிறு காலை சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் குறித்து தகவல் அறிந்த ஊர் பொதுமக்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் போராட்டம் வலுத்தது.

    இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்பை மீறி பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தனர்.

    பள்ளிக்குள் நுழைந்தவர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் காவல் துறையினர் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதில் காவல்துறையினர் பலர் காயம் அடைந்தனர். மேலும், அங்கிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளிக்குள் நுழைந்தவர்கள் அங்கிருந்த கணினிகள், நாற்காலிகள், ஆவணங்களுக்கு தீ வைத்தனர்.

    பள்ளியில் வன்முறை கட்டுக்கடங்காமல் செல்ல கூடுதலாக 500 அதிரடிப்படை வீரர்கள் வன்முறை நடைபெற்ற சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குவிக்கப்பட்டனர். பெரும் போராட்டத்துக்குப் பிறகு வன்முறையாளர்களை விரட்டியடித்த அதிரடிப்படையினர், கடந்த ஞாயிறு பிற்பகல் 3.30 மணியளவில் பள்ளி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை தமிழகக் காவல்துறை நியமித்துள்ளது. ஐந்து பேர் அடங்கிய இந்தக் குழுவுக்கு சேலம் சரக டிஐஜி பிரவீன்குமார் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். 

    முன்னதாக, கடந்த 13-ம் தேதி உயிரிழந்த மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்டது. இந்த உடற்கூராய்வு அறிக்கை கடந்த 17-ம் தேதி வெளிவந்தது. அந்த அறிக்கையில், மாணவி ஶ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் மற்றும் மாணவியின் உடைகளில் ரத்த கறைகள் இருந்தது தெரியவந்துள்ளது.

    மேலும், மாணவி ஶ்ரீமதியின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியினாலும் மற்றும் இரத்தம் உறைந்ததாலும் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய தரவுகளுக்காக உடலின் பிற உறுப்புகள் ரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து, கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவி ஶ்ரீமதியின் தந்தை சென்னை உயர்தநீதிமன்றத்தில் உடல்மறுகூராய்வு செய்வதுக்கான அனுமதி கோரி தொடர்ந்த மனு கடந்த 18-ம் தேதி நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்துள்ளதாவது:

    இந்த போராட்டத்துக்கு அனுமதி அளித்தது யார்? வன்முறையில் ஈடுபட்டது யார்? பள்ளி வன்முறையின் பின்னணி என்ன? வன்முறையை தூண்டிவிட்டது யார்? வன்முறை தொடர்பாக உளவுத்துறை எடுத்த நடவடிக்கை என்ன?  சட்டத்தை மக்கள் கையில் எடுத்துக்கொண்டால் நீதிமன்றம் எதற்கு? நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? என நீதிபதி சதீஷ்குமார் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

    பள்ளியில் நடந்த வன்முறை திடீர் கோபத்தில் உருவானது அல்ல. திட்டமிட்ட செயல். வன்முறையில் ஈடுபட்டோரை காணொளி காட்சி மூலம் அடையாளம் கண்டு டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டோரை தனிப்படை அமைத்து அடையாளம் காண வேண்டும். வன்முறையாளர்களை கண்டறிந்து பள்ளியில் ஏற்பட்ட இழப்பை அவர்களிடம் இருந்தே வசூலிக்க வேண்டும்.

    மேலும், தனியார் பள்ளியில் டிராக்டரை கொண்டு பஸ்சை மோதிய சம்பவமே ஒட்டுமொத்த வன்முறைக்கும் காரணம். மாணவி இறுதிச்சடங்கு அமைதியாக நடக்க வேண்டும்.

    மேலும், மாணவியின் உடலை மறு கூராய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

    மேற்கூறியவாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    இந்த உத்தரவுக்குப்பிறகு, மாணவி ஶ்ரீமதியின் தந்தை மாணவியின் உடலை மறுகூராய்வு செய்யவும், உடலை மறுகூராய்வு செய்யும் போது தங்கள் தரப்பு மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும் என்று தந்தை ராமலிங்கம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீட்டு மனு அளிக்கப்பட்டது.

    ஆனால், சென்னை உயர்நீதிமன்றம், தந்தையின் தரப்பில் மருத்துவரை அனுமதிக்க மறுத்துவிட்டது. எனவே, இந்த உத்தரவில் தங்களுக்கு நிறைவு இல்லை என்பதால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக தெரிவித்தார். அதோடு, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராமலிங்கம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

    அதன்பின்னர், மாணவி ஶ்ரீமதியின் உடலை மறுகூராய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைக்குமாறு மாணவியின் தந்தை தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.

    இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், உடற்கூராய்வின் போது மாணவி ஶ்ரீமதியின் பெற்றோர்கள் இல்லாவிட்டாலும் உடற்கூராய்வை மேற்கொள்ளும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி வழக்கில் தொடர்புடைய பள்ளி நிர்வாகிகள் கைது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....