Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்காளி ஆவணப்படத்துக்கு புகையிலை கட்டுப்பாட்டு அமைப்பு கண்டனம்!

    காளி ஆவணப்படத்துக்கு புகையிலை கட்டுப்பாட்டு அமைப்பு கண்டனம்!

    காளி ஆவணப்பட போஸ்டரில் உள்ள புகைப்பிடிக்கும் காட்சிக்கு புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. 

    இந்திய ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை இயக்கத்தில் உருவான ஆவணப்படம், ‘காளி’. இந்த ஆவணப்படம் கனடா நாட்டில் நடைபெற்ற ‘ரிதம்ஸ் ஆஃப் கனடா’ என்ற நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது. 

    இதனையொட்டி, காளி ஆவணப்படத்தின் இயக்குநர் லீனா மணிமேகலை தனது சமூக வலைதள பக்கத்தில் இப்படத்துக்கான போஸ்டரை வெளியிட்டார். அந்த போஸ்டரில், இந்துக்களின் கடவுளான காளி வேடத்துடன் ஒருவர் புகைப் பிடிப்பது போன்றும், ஒரு கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தியபடியும் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 

    காளி வேடமணிந்த பெண் புகைப்பிடிப்பது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பு இந்த சித்தரிப்புக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. 

    இது குறித்து புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் அமைப்பாளர் சிரில் அலெக்சாண்டர் கூறியதாவது:

    ’’திரைப்படங்களில் விளம்பரத்துக்காக வேண்டுமென்றே புகைப்பிடிக்கும் காட்சிகள் வைப்பதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சமூக தீங்குக்கு காரணமான காட்சிகளை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, ஒன்றிய, மாநில புகையிலை கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புகார் அளிக்கப்ட்டுள்ளது’’ என்று கூறினார். 

    இதற்கிடையில், “இந்து கடவுள்களை அவமரியாதையாக சித்தரித்ததற்காக” உத்தரபிரதேச காவல்துறை, காளி ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், காளி ஆவணப்படம் திரையிடப்படுவதிலிருந்து நீக்கப்படுவதாக ஆகா கான் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....