அரியலூர் மாவட்டத்துக்கு வருகிற ஜூலை 26-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள ராஜேந்திர சோழீச்வரம் எனப்படும் அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில் உலக புகழ் பெற்றதாகும்.
இந்த கோயிலில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திரமான திருவாதிரையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை திருவிழா அப்பகுதி மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் வருகிற ஜூலை 26-ம் தேதி ஆடி திருவாதிரையில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்துக்கு அன்று (ஜூலை 26) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு