Monday, April 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வெளியாகிறதா ஜிகர்தண்டா-2 திரைப்படம்?

    வெளியாகிறதா ஜிகர்தண்டா-2 திரைப்படம்?

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிப்பில் வெளிவந்த ஜிகர்தண்டா இன்றோடு எட்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

    தமிழ்த் திரைப்படங்களை பொறுத்தவரையில் மதுரை நகரத்தைப் பின்னணியாக கொண்ட திரைப்படங்கள் அவ்வபோது வருவது வழக்கமான ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. ஆனால், வெளிவரும் அத்தனை திரைப்படங்களும் மக்களை கவர்ந்துவிடுகிறதா? வசூல் வேட்டை நிகழ்த்தி விடுகிறதா?  என்றால் அது கேள்விக்குறியே. 

    இந்நிலையில், மதுரை நகரத்தைப் பின்னணியாக கொண்டு மேற்கூறிய கேள்விகளை தகர்த்து வசூலிலும் வெற்றிப்பெற்ற திரைப்படம்தான், ஜிகர்தண்டா. 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். 

    இத்திரைப்படத்தில், சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், குரு சோமசுந்தரம், அம்பிகா போன்றோர் நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்திருந்தார். மேலும், சந்தோஷ் நாரயணன் ஜிகர்தண்டா திரைப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.

    2014-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் தமிழ்த் திரைப்பட ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது என்றுதான் கூற வேண்டும். வித்தியாசமான திரைக்கதை மற்றும் வித்தியாசமான படத்தொகுப்பின் வாயிலாக கதைச்சொல்லிய இத்திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை திரையுலகமே பாராட்டியது. குறிப்பாக, ஜிகர்தண்டா திரைப்படத்தில் நடித்த பாபி சிம்ஹா பெரிதும் பாராட்டப்பெற்றார்.

    மேலும், ஜிகர்தண்டா திரைப்படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். அதோடு, ஜிகர்தண்டா திரைப்படத்துக்கு சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதும் அளிக்கப்பட்டது. இந்த விருதை விவேக் ஹர்சன் பெற்றுக்கொண்டார். 

    விருதுகள், நல்ல விமர்சனங்கள் என பல நல்நிகழ்வுகளை தன்னிடத்தில் கொண்டுள்ள ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இச்செய்தியை ஜிகர்தண்டா திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்  தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

    மேலும், ஜிகர்தண்டா திரைப்படத்தின் அடுத்த பாகம் குறித்த அறிவிப்பையும் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். அதன்படி, ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான எழுத்துவேலை சென்றுக்கொண்டிருப்பதாக அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது தற்போது சமூக வலைதளங்களில் திரைப்பட ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. 

    நம்பிக்கையையும், அம்மாவின் நினைவுகளையும் ஒருசேரத் தூண்டும் யுவனின் பாடல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....