Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஜடேஜாவுக்கு என்ன ஆச்சு? ஐபிஎல் தொடரிலிருந்து ஏன் விலகினார் ஜடேஜா?

    ஜடேஜாவுக்கு என்ன ஆச்சு? ஐபிஎல் தொடரிலிருந்து ஏன் விலகினார் ஜடேஜா?

    2022 ஆம் ஆண்டுக்கான நடப்பு ஐபிஎல் தொடர், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. குஜராத் மற்றும் லக்னோ அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், அடுத்த இரண்டு இடங்களைப் பிடிக்க கிட்டத்தட்ட மற்ற 6 அணிகளிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

    மற்ற அணிகளின் வெற்றி தோல்வியைப் பொறுத்து தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும். இந்நிலையில், சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மற்றும் முன்னாள் கேப்டனான ரவீந்திர ஜடேஜா, நடப்புத் தொடரில் இருந்து, காயம் காரணமாக விலகியிருக்கிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

    இது, சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக, ஜடேஜா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார். இந்நிலையில், சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார்.

    ஆனால், இவரது தலைமையின் கீழ் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. இதனையடுத்து, தனது விளையாட்டில் கவனம் செலுத்தப் போகிறேன் எனக் கூறி, மீண்டும் கேப்டன் பதவியை மகேந்திர சிங் தோனியிடம் ஒப்படைத்து விட்டு விலகினார். இந்த நிலையில், காயம் காரணமாக தற்போது நடப்பத் தொடரில் இருந்தே விலகும் முடிவை ஜடேஜா எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற பல போட்டிகளில், மிகச் சிறப்பான ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தி வந்தார் ஜடேஜா. அதேபோல, ஐபிஎல் தொடர்களிலும் தனது அட்டகாசமான பங்களிப்பை சென்னை அணிக்கு அவர் செலுத்தி வந்தார்.

    இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து, மிக மோசமான ஃபார்ம் காரணமாக சிரமப்பட்டு வருகிறார் ஜடேஜா. அதுவும் பல்வேறு கேட்சுகளை கூட களத்தில் பிடிக்கவில்லை என்றால், பீல்டிங்கில் அசத்தும் ஜடேஜாவா இது என வியக்கும் அளவிற்கு அது இருந்தது. இந்நிலையில், தொடரிலிருந்து அவர்  முழுமையாக விலகுவதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

    இனி சென்னை அணி விளையாடப் போகும் போட்டிகளில், ஜடேஜா விளையாட மாட்டார். அவர் இல்லாதது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவை அளிக்கும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....