Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு'நாயகன் மீண்டும் வர' - நீண்ட நாட்களுக்கு பிறகு களத்தில் ரவீந்திர ஜடேஜா!

    ‘நாயகன் மீண்டும் வர’ – நீண்ட நாட்களுக்கு பிறகு களத்தில் ரவீந்திர ஜடேஜா!

    நீண்ட நாட்களுக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜா விளையாடவுள்ள போட்டியானது நாளை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. 

    இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தமிழ்நாடு அணிக்கு எதிராக விளையாடுவதற்காக சென்னை வந்துள்ளார். ஜடேஜா கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பைக்குப் பிறகு எந்தவித சர்வேதச போட்டியிலும் விளையாடவில்லை. 

    ஆசியக் கோப்பையில் ஹாங்ஹாங் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜடேஜா இருபது ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கவில்லை. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற போட்டிகளிலும் ஜடேஜா பங்கேற்கவில்லை. 

    இந்நிலையில், சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை சீரான நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான இந்திய அணியில் ஜடேஜா இடம்பெற்றுள்ளார். ஆனால், இப்போட்டிக்கு முன்பாக அவர் தன் உடல்தகுதியை முதல்தர போட்டியின் மூலம் நிரூபிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. 

    இதனால், சவுராஸ்டிரா மற்றும் தமிழ்நாடு அணிகளுக்கு இடையே நடைபெறும் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ஜடேஜா பங்கேற்கவுள்ளார். சவுராஸ்டிராவுக்காக ஜடேஜா விளையாடவுள்ள போட்டியானது நாளை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. 

    ஊராட்சித் துறையில் ரூ.71,000-த்திற்கு வேலை; விண்ணப்பிக்க முந்துங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....