2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் தான் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், விசிகவின் கோட்டையாக சொல்லப்படும் கடலூர் மாவட்டத்திலேயே பாஜக நன்றாக வளர்ந்து வருவதாக தெரிவித்தார். மேலும் கூட்டணிக் கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக திருமாவளவன் சொல்வது தவறானது என தெரிவித்துள்ளார்.
பிற கட்சி விவகாரங்களில் பாஜக எப்போதும் தலையிடாது எனவும் திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டுமென திருமாவளவன் முடிவு செய்துவிட்டதாகவும் கூறிய அண்ணாமலை, தைரியமாக வெளியே வரட்டும் என்று தெரிவித்ததோடு விசிக தலைவர் மாறி மாறி பேசுவதாக தெரிவித்தார்.
2024 மக்களவை தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் தான் எனவும், யார் பாஜகவிற்கு வந்தாலும் அரவணைப்பது தனது கடமை எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மோகன்லால் நடிப்பது இப்படி ஒரு கதாப்பாத்திரத்திலா? – வியப்பில் திரையுலகம்!