Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'நானே வருவேன்' முதல் நாள் வசூல் இவ்வளவா? பாராட்டிய தயாரிப்பாளர்..

    ‘நானே வருவேன்’ முதல் நாள் வசூல் இவ்வளவா? பாராட்டிய தயாரிப்பாளர்..

    ‘நானே வருவேன்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் ரூ.10.1 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான், நானே வருவேன். இதற்கு முன்பாக செல்வராகவன் மற்றும் தனுஷ் இணைந்து பணியாற்றிய அத்தனை திரைப்படங்களுக்கும் ரசிகர்களிடையே நற்பெயருள்ளது. 

    மேலும், மயக்கம் என்ன திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு என்பது பன்மடங்கு உயர்ந்தது. 

    ‘நானே வருவேன்’ திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.
    மேலும், இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சமீபத்தில் இத்திரைப்படத்தில் இருந்து யுவன் குரலிலும், செல்வராகவன் வரியிலும் வெளிவந்த ‘வீரா சூரா’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

    இதையும் படிங்க: வெளியானது பொன்னியின் செல்வன் – செண்டை மேளம் முழங்க சோழர்களை கொண்டாட வந்த ரசிகர்கள்!

    இதைத்தொடர்ந்து, நானே வருவேன் திரைப்படத்திலிருந்து வெளியான டீசர் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இசையும், டீசர் தொகுக்கப்பட்டிருக்கும் விதமும் டீசரை வெகுவாக மக்களை ரசிக்க வைத்தது. 

    தனுஷ் இரு வேறு கதாப்பாத்திரங்களில் காட்டும் வேறுபாடும் தோரனையும் பார்ப்போரை மிரளச்செய்தது. செல்வராகவன் இயக்கத்தோடு இல்லாமல், நடிகராகவும் இத்திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார். டீசரில் செல்வராகவன் வரும் காட்சிகள் ‘வாவ்’ சொல்ல வைத்தது. கதையை பெரும்பாலும் யூகிக்க முடியாதபடியே டீசர் இருந்தது. இதனால், ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பானது மேலும் ஓங்கியது. 

    இந்நிலையில், ‘நானே வருவேன்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பெரியதாக எந்தவித புரோமஷன்களும் செய்யப்படாத நிலையில், நானே வருவேன் திரைப்படம் (செப்டம்பர் – 29) தேதி தமிழகம் முழுவதும் ரூ.10.1 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இதையடுத்து, தயாரிப்பாளர் தாணு இயக்குநர் செல்வராகவனை நேரில் சந்தித்து மாலை அணிவித்து தன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....