Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமோசடி செய்த வருங்கால கணவரை அதிரடி கைது செய்த பெண் போலீஸ் தற்போது கைது -...

    மோசடி செய்த வருங்கால கணவரை அதிரடி கைது செய்த பெண் போலீஸ் தற்போது கைது – உண்மையில் என்னதான் நடந்தது?

    தனது வருங்கால கணவர் ஒரு மோசடி பேர்வழி என தெரியவந்த அசாம் பெண் சப் – இன்ஸ்பெக்டர் ஒருவர், அவரை உடனடியாக கைது செய்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்று வந்தது. ஆனால், தற்போது அந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது.

    அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜுன்மோனி ரபா, இவர் உதவி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது பெற்றோர்கள் ஜுன்மோனி ரபாவிற்கு திருமணத்திற்காக வரன் தேடி வந்துள்ளனர். திருமணம் வரன் பார்க்கும் இணையதளத்தில் பதிவு செய்து இருந்தனர். ராணா போகட் என்பவர் இணையதளம் வழியாக ஜுன்மோனிக்கு அறிமுகமாகியுள்ளார். தான் அரசு அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பதாக கூறியுள்ளார்.

    இதை நம்பிய ஜுன்மோனியும், ராணா போகட்டுடன் பேசி பழகிவந்துள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. வரும் நவம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது. நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த உடன் வருங்கால கணவருடன் உதவி இன்ஸ்பெக்டர் தொலைபேசி வாயிலாக பேசி வந்துள்ளார்.

    உண்மை முகம் தெரியும்..

    இதற்கிடையில் ஜுன்மோனிக்கு அறிமுகம் இல்லாத ஒரு நபர் திடீரென்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நீங்கள் திருமணம் செய்துகொள்ள இருக்கும் நபர் சரியானவர் இல்லை நீங்கள் விசாரித்துப் பாருங்கள் அவருடைய உண்மை முகம் தெரியும் என கூறியுள்ளார்.

    ஜுன்மோனி முதலில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத போதிலும், அதுகுறித்து விசாரிக்க முடிவெடுத்தார். அதன்படி ராணா போஹாட்டுக்கு போன் செய்த ஜுன்மோனி, அவரது பணிபுரியும் அலுவலகம் எங்குள்ளது எனக் கேட்டுள்ளார். அதற்கு போஹாட் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே உஷாரான ஜுன்மோனி, அதற்கு அடுத்தடுத்த நாட்களில் போஹாட்டுக்கு தெரியாமலேயே அவர் குறித்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டார்.

    அப்போது ராணா ஓ.என்.ஜி.சி அரசு நிறுவனத்தின் உயர் அதிகாரி எனக் கூறி கொண்டு, பலரிடம் வேலை வாங்கி தருவதாக கோடிக் கணக்கில் பண மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் இதுபோன்று மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ராணா மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதற்கான முழு ஆதாரங்களைத் திரட்டி ஜுன்மோனி நேற்று தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டவர் என்றும் பாராமல் ராணா போஹாடை அதிரடியாகக் கைது செய்துள்ளார். பணமோசடியில் ஈடுபட்டவர் வருங்கால கணவர் என்றும் பாராமல் கைது செய்த உதவி காவல் ஆய்வாளர் ஜுன்மோனி ரபாவுக்கு காவல்துறையின் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    ஆனால், சில நாட்களிலேயே அந்த நிலை தலைகீழாக மாறி, அந்த மோசடி வழக்கில் ராபாவுக்கும் தொடர்பிருப்பதாகவும், மோசடி மூலம் ராபாவின் வங்கிக் கணக்குகளில் ரூ.20 லட்சம் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    ஓஎன்ஜிசி நிறுவனத்தின் அதிகாரி என்று போகட்டை தங்களுக்கு ராபா தான் அறிமுகம் செய்து வைத்ததாகவும், அவரது உறுதிமொழியின் பேரிலேயே போகாட்டுக்கு பணத்தை பரிமாற்றம் செய்ததாகவும் இரண்டு ஒப்பந்ததாரர்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பான ஆடியோ பதிவுகளும் காவல்துறைக்குக் கிடைத்திருப்பதாகவும், அதன் உறுதித் தன்மை ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதம் மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட போகாட் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....