இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டிக்காக பிரிஸ்பேனில் நடைபெறும் முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதைத்தொடர்ந்து, இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரோஹித் சர்மா 15 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இதற்கு பின் களமிறங்கிய கோலியும் 19 ரன்களில் நடையை கட்டினார்.
இதையும் படிங்க: உலகக் கோப்பை: முதல் ஆட்டத்திலேயே வெற்றிகொடி கட்டிய நமீபியா…
கே.எல். ராகுல் 57, சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் அடிக்க இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. மேலும், பாண்டியா 2, தினேஷ் கார்த்திக் 20 ரன்கள் எடுத்தார்கள். கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலிய அணி.
ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஆகியோர் அதிரடியாக விளையாடினார். 35 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் மார்ஷ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதையடுத்து, களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 11 ரன்களிலும், மேக்ஸ்வெல் 23 ரன்களிலும் வெளியேற மறுமுனையில் ஆரோன் ஃபின்ச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 76 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பிறகு வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்க, 20 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி பத்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இதையும் படிங்க: மனிதர்கள் ஏன் சிரிக்கிறார்கள் தெரியுமா?