மழைக் காரணமாக இந்தியா மற்றும் நியூசிலாந்திற்கு இடையேயான முதலாவது இருபது ஓவர் போட்டி கைவிடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளிலும், 3 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
இந்தச் சுற்றுப்பயணத்தின் முதல் நிலையாக, இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதலாவது இருபது ஓவர் போட்டியில் விளையாட இருந்தன. இந்நிலையில், மழை குறுக்கீட்டது. இதனால். டாஸ் போடும் நிகழ்வு சற்று தள்ளிப்போனது.
இதைத்தொடர்ந்து, ஆட்டம் விரைவில் தொடங்கும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. தொடர்ந்து மழை பெய்ததால் முதல் இருபது ஓவர் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இரண்டாவது இருபது ஓவர் போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி நாளை முதல் துவக்கம்; அணி விவரங்கள் உள்ளே!