ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி களமிறங்குவார் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலிய அணி தற்போது வரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.
இதில் மூன்றாவது டெஸ்ட் இந்தூரில் நடைபெற்றது. இந்த டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றது. இருப்பினும், டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் மார்ச் 9-ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டியில் இந்திய அணி வென்றால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு பிராகசமடையும். ஆதலால் இப்போட்டியை வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி களமிறங்க உள்ளது.
அதனின் ஒரு பகுதியாக நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முதல் இரு டெஸ்டில் விளையாடிய ஷமிக்கு, அவரது பணிச்சுமையை குறைக்கும் வகையில் மூன்றாவது டெஸ்டில் ஓய்வு தரப்பட்டு, உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.
மேலும், இந்திய அணி சார்பில் முகமது ஷமி களமிறங்கும் பட்சத்தில் முகமது சிராஜூக்கு ஓய்வளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டபிள்யுபில் – விஸ்வரூபம் எடுத்த கௌர்; சுருண்ட குஜராத் அணி..