Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசிறப்பான தொடக்கம், ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடி; 306 ரன்களை குவித்த இந்தியா

    சிறப்பான தொடக்கம், ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடி; 306 ரன்களை குவித்த இந்தியா

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 307 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

    இந்திய அணி தற்போது நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. 

    இவற்றுள் இருபது ஓவர் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில், இன்று முதலாவது ஒருநாள் போட்டி நடைபற்று வருகிறது. ஆக்லாந்தில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, ஷிகர் தவான் தலைமையிலான் இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது.

    இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக, கேப்டன் ஷிகர் தவனும் சுப்மன் கில்லும் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். இருவருமே தங்களது அரைசதங்களை பூர்த்தி செய்தனர். சுப்மன் கில் 50 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுக்க, தவானுடன் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். ஆனால், தவான் 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெவிலியன் திரும்பினார். 

    இதைத்தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் பெரிதும் சோபிக்காத நிலையில், அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 36 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் நிலைத்து ஆடிய ஷ்ரேயாஸ் 80 ரன்கள் எடுத்த நிலையில் பெர்குசன் பந்தில் சரிந்தார். 

    இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    6 ஆயிரம் பேரை நீக்கப்போகும் எச்பி; வெளிவந்த திடுக்கிடும் தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....