இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேலும் புதிதாக 20,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,36,89,989 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,36,076 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,25,557 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,482 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,28,356 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 13,44,714 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 199.27 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி