Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு!

    இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,159 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    நேற்று முன்தினம் 16 ஆயிரத்து 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 86 ஆக குறைந்தது. 

    இந்நிலையில், இன்று புதிதாக 16,159 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

    இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 16,159 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், மொத்த கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,35,47,409 ஆக அதிகரித்துள்ளது. 

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 பேர் ஆவர். இதனால், இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,25,270 ஆக அதிகரித்துள்ளது. 

    இதைத்தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் 15,394 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம், இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,29,07,327 ஆக அதிகரித்துள்ளது. 

    மேலும், கொரோனா தொற்றுக்கு தற்போது 1,15,212 சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,95,810 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....