கொரோனா சூழ்நிலையின் காரணமாக, சுதந்திர தினத்தில் அணிவகுப்பு எதுவும் இடம்பெறாது என்றும் ஒடிசா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது உள்ள கொரோனா சூழ்நிலை காரணமாக, சுதந்திர தினத்தை எளிமையாக நடத்த உள்ளதாகவும், அணிவகுப்பு எதுவும் இடம்பெறாது என்றும் ஒடிசா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவில் பொதுமக்களின் பங்கேற்பு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கமான அணிவகுப்பு மரியாதையும், காவல்துறை பேண்ட் (Police Band) பங்கேற்பும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு தீவிரம்