நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழையும், சாரல் மழையும் பெய்து வருகிறது. மேலும் நீலகிரியின் பல பகுதிகளில் மழையால் அதிக குளிரும் ஆங்காங்கே மண்சரிவும், மரங்கள் விழும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது.
இதன்காரணமாக, பொதுமக்கள் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மீட்புப் பணிகளுக்கு 04232223828, 9789800100 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறும் அம்மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தொடர் கனமழை காரணமாக நேற்று ஊட்டி, குந்தா, பந்தலூர், கூடலூர் ஆகிய 4 தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் விடுமுறை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அம்ரித், இன்று (வெள்ளிக்கிழமை) நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு