Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இந்தி எதிர்ப்பு போர்வையில்.. ஆங்கிலத்தை வளர்க்கிறார்கள்.. அண்ணாமலை சரமாரி குற்றச்சாட்டு

    இந்தி எதிர்ப்பு போர்வையில்.. ஆங்கிலத்தை வளர்க்கிறார்கள்.. அண்ணாமலை சரமாரி குற்றச்சாட்டு

    இந்தி எதிர்ப்பு என்று சொல்லி ஆங்கிலத்தை புகுத்தினால் வீதிக்கு வந்து போராடுவோம் என கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். 

    தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என கூறி தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று கடலூர் மஞ்சக்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:

    திமுக தமிழ்மொழியை வளர்க்கவில்லை, அழித்து கொண்டிருக்கிறது என்று எங்கேயும் போராட்டம் நடந்ததாக சரித்திரம் கிடையாது. முதன் முதலாக இந்த போராட்டத்தை பாஜக முன்னெடுத்துள்ளது. 

    தமிழகம் முழுவதும் 60 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மக்களுக்கு தி.மு.க.வின் சதி திட்டத்தை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும். தி.மு.க.வின் இரட்டை வேடத்தை கோடிட்டு காட்டுவதற்காகதான் இந்த போராட்டம். 

    இதையும் படிங்க: நவம்பர் 11-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி: காரணம் இதுதான்..!

    கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் மட்டும் 48 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறவில்லை. இதுவரை இத்தனை பேர் தேர்ச்சி பெறாமல் இருந்ததில்லை. தமிழகத்தில் 2 லட்சம் என்ஜினீயரிங் சீட் உள்ளது. அதில் தமிழ்மொழியில் படிப்பதற்காக 1,377 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 50 மாணவர்கள் மட்டுமே சேர்ந்து உள்ளனர். தமிழ் மொழி மெல்லமெல்ல அழிந்து வருகிறது.

    இந்தியை யாரும் திணிக்கவில்லை. இந்தி திணிப்பு என்ற வார்த்தையின் மூலமாக ஆங்கிலத்தை திணிப்பதுதான் தி.மு.க.வின் எண்ண ஓட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

    திமுகவினர் நடத்தும் பள்ளிகளிலும் 3-வது மொழி இந்திதான். இதை மறுக்க முடியுமா? மறுபடியும் இந்தி எதிர்ப்பு என்று ஆங்கிலத்தை புகுத்தினால் அடுத்த போராட்டம் மக்கள் அனைவரும் வீதிக்கு வந்து, அவர்களை எதிர்த்து கேள்வி கேட்கும் அளவில் இருக்கும்.

    தமிழக வரலாற்றில் கோவையில் நடந்தது, முதல் தற்கொலை படை தாக்குதல். 13 பேர் திட்டம் போட்டு 75 கிலோ வெடி மருந்துகளை வாங்கி சேமித்து, அதை காரில் கொண்டு சென்றபோது. வெடித்துள்ளது. இதுதான் உண்மை. தற்கொலை படை தாக்குதலை சிலிண்டர் வெடித்தது என்று கூறுவது வெட்கக்கேடானது. அரசியல் களம் மாறி விட்டது. திமுக வின் மத, சாதி அரசியல் எடுபடாது.

    இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு சம்பவம்; தமிழக அரசின் என்ஐஏ பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு

    அம்பேத்கர் பெயரை சொல்லி அரசியல் நடத்தும் திருமாவளவன் எம்.பி.. அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரசோடு கூட்டணி வைத்துள்ளார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. 

    கலங்கரை விளக்கு நம் கண்ணுக்கு தெரிகிறது. அதை நோக்கி, படகில் மாலுமிகளாக நாம் செல்ல வேண்டும். அலைகளை தாண்டி சென்றால் தான் மக்களின் நம்பிக்கை கிடைக்கும். தமிழகத்தில் அனைத்து மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் தமிழ் மூலமாக படிக்க வழிவகை செயய வேண்டும். அதற்காக குழு அமைக்க வேண்டும். தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.2500 ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு, அவர் பேசியுள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....