ராகுல் காந்தியிடம் அவரது வருங்கால மனைவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டத்திற்கு, அவர் சுவாரசியமான பதிலை அளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார். பல மாநிலங்களைக் கடந்து இந்த நடைபயணம் காஷ்மீரை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. தற்போது ஜம்மு-காஷ்மீரில் இறுதி கட்டத்தை இந்தப் பயணம் நெருங்கி உள்ளது.
இந்நிலையில், இந்த இந்திய ஒற்றுமை நடைபயணத்தின்போது, அவரிடம் வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு அதற்கான பதில்களை ராகுல் காந்தி அளித்துள்ளார். இது தொடர்பான காட்சிகளை காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பகிர்ந்துள்ளனர்.
எந்த நேரத்தில் திருமணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறீர்கள்? என கேட்கப்பட்ட கேள்விக்கு, ராகுல் காந்தி சரியான பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தனது பாட்டி இந்திரா காந்தி தான், அவரது வாழ்வின் காதல் மற்றும் இரண்டாம் தாய் என ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். மேலும் அவரைப் போன்ற பெண்ணை தேர்வு செய்வேன் என்றும் கூறியுள்ளார்.
தான் விரும்பும் பெண் அம்மா மற்றும் தனது பாட்டியின் குண நலன்களைக் கொண்டு இருந்தால் நல்லது எனவும் தெரிவித்துள்ளார். தற்போது ராகுல் காந்திக்கு 52 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு