“ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் குண்டர்களே எனது பொறுமையின் காரணமாக நீங்கள் இன்னும் இருக்குறீர்கள்” என நடிகர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்க வலியுறுத்தி வட ஆந்திர கூட்டு நடவடிக்கை குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘விசாக கர்ஜனை’ என்ற பெயரில் விசாகப்பட்டினத்தில் மிகப்பெரிய பேரணியை நடத்தினர்.
இந்தப் பேரணியில், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினர் அமைச்சர் ரோஜா உள்ளிட்டோரின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ரோஜாவின் உதவியாளர், காவல்துறையினர் ஆகியோர் காயமடைந்தனர்.
இதனிடையே, “பாஜகவின் ‘பி’ டீமாக செயல்படும் நடிகர் பவன் கல்யாண், ஜனசேனா கட்சியை பாஜகவிடம் பணம் வாங்கி நடத்தி வருவதாக” ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அமராவதி அருகே தனது கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியினர் இடையே பேசிய பவன் கல்யாண், திடீரென தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி உயர்த்தி காட்டி,
“மற்ற கட்சிகளிடம் இருந்து பணம் வாங்கி கொண்டு கட்சி நடத்துகிறேன் என என்னை சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் குண்டர்களே எனது பொறுமையின் காரணமாக நீங்கள் இன்னும் இருக்கிறீர்கள்” என ஆவேசமாக பேசினார்.
இதையும் படிங்க: மக்களின் மனநிலையை மடைமாற்றவே, இந்தி எதிர்ப்பு போராட்டம் – வானதி சீனிவாசனின் காரசார அறிவிப்பு!