லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாம்பே ஜெயஸ்ரீ குணமடைந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தென்னிந்தியாவின் முக்கிய பாடகியாக திகழ்ந்து வருபவர் பாம்பே ஜெயஶ்ரீ. கர்நாடக இசைக்கலைஞரான இவர் தென்னிந்திய அளவில் பல்வேறு திரைப்படங்களில் பாடியுள்ளார். தமிழில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இவர் பாடிய தமிழ்ப் பாடல்களுக்கு தனி ரசிக கூட்டம் உள்ளது.
இவர் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்ள இங்கிலாந்து சென்றிருந்தார். நேற்று மாலை அவரது இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்த நிலையில் அவர் திடீரென மயங்கி விழ, சுயநினைவையும் அவர் இழந்தார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் பாம்பே ஜெயஶ்ரீ அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாம்பே ஜெயஶ்ரீ-க்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் கோமா நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ நன்றாக குணமடைந்து வருகிறார் என்றும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஓரிரு நாட்கள் ஓய்வு தேவைப்படுவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஏழைக்கு ஒரு சட்டம், ராகுல் காந்திக்கு ஒரு சட்டம் இல்லை- பாஜக அண்ணாமலை