சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையின் மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகாலை முதலே சற்று பலத்த மழை பெய்தது. ஒரு சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது.
இதன்படி திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், அடையாறு, வேளச்சேரி, வண்டலூர், தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வந்தது.
சென்னை முழுவதும் பெய்த மழையால், கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் அலுவலகங்களுக்கு செல்வோரும் மிகுந்த சிரமம் அடைந்தனர். மேலும் தேனாம்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் சாலை நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக தாம்பரம் சாலைகளில் மழைநீர் தேங்கியிருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க:இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு திருமணம்! நேரில் சென்று வாழ்த்திய கோலிவுட் பிரபலங்கள்