Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகனமழை எதிரொலி; தமிழகத்தில் சில மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

    கனமழை எதிரொலி; தமிழகத்தில் சில மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

    தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சில மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 4) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. 

    தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

    இந்நிலையில், கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரீத் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தொடர் மழை காரணமாக, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சிறுமலை பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து, அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

    அதேபோல் கனமழை காரணமாக, கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து, அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து, அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

    மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....