Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் அண்ணாமலையின் ஹாஷ்டாக்.. மோதலில் மத்திய மாநில கட்சியினர்

    ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் அண்ணாமலையின் ஹாஷ்டாக்.. மோதலில் மத்திய மாநில கட்சியினர்

    நேற்று முன்தினம் ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் எய்தினர். அவர்களில், மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரரும் அடங்குவார். 

    இந்நிலையில், இன்று லட்சுமணன் உடல் அவரின் சொந்த ஊரான மதுரைக்கு இன்று (ஆகஸ்ட் 13) நண்பகல் நேரத்தில் கொண்டு வரப்பட்டது. 

    ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். 

    இதனைத்தொடர்ந்து, ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்டபோது, நிதியமைச்சர்  பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்டது. அமைச்சரின் காரில் தேசிய கொடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் நடந்த இந்த சம்பவத்தால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகே, பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் எனக் கூறியதால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இந்நிலையில், நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில், அவனியாபுரம் காவல்துறையினர் 5 பேரை  கைது செய்துள்ளனர். 

    இதனிடையே, சமூக வலைத்தளமான ட்விட்டரில், தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையை வைத்து, செருப்பு பிஞ்சிரும் அண்ணாமல என்ற ஹாஷ்டாக் வேகமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....