Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்‘மனைவி வந்த நேரம் நல்ல நேரம்’ - ஹரிஷ் கல்யாணுக்கு கிடைத்த ஜாக்பாட்!

    ‘மனைவி வந்த நேரம் நல்ல நேரம்’ – ஹரிஷ் கல்யாணுக்கு கிடைத்த ஜாக்பாட்!

    ‘தோனி எண்டர்டெயின்மென்ட்’ மூலம் தயாரிக்கவுள்ள திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். 

    பிக்பாஸ் நிகழ்ச்சி, பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் பலரையும் கவர்ந்த நடிகர்தான், ஹரிஷ் கல்யாண். தற்போது, நூறு கோடி வானவில், டீசல் போன்ற திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். இவருக்கு நர்மதா உதயகுமாருடன் இன்றுதான் திருமணம் நடைபெற்றது. 

    இதைச் சார்ந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளன. மேலும், ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் ஹரிஷ் கல்யாண்-நர்மதா தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது திருமணத்திற்கு மட்டுமல்லாமல், இன்னொரு விஷயத்திற்காகவும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    ஆம்,மகேந்திர சிங் தோனி தனது தயாரிப்பு நிறுவனமான, ‘தோனி எண்டர்டெயின்மென்ட்’ மூலம் தயாரிக்கவுள்ள திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால், ஹரிஷ் கல்யாணுக்கு தொடர்ந்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மேலும், பலர் ‘மனைவி வந்த நேரம் நல்ல நேரம்’ என பதிவிட்டு வருகின்றனர். 

    தமிழில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்க, அந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கவிருக்கிறார் என்றும், படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: எங்கேயும் காதல்.. மனநல காப்பகத்திலும் மலரும் காதல்.. அமைச்சர் தலைமையில் கோலாகல திருமணம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....