உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, அரசின் திட்டங்களுக்கும், அறிவிப்புகளுக்கும் எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேரு குற்றச்சாட்டுககளை முன்வைத்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த செப் 4-ஆம் தேதி அன்று உத்தர பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ,திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நம் மாநிலத்தில் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக எந்த கலவரமும் நடைபெறவில்லை. தற்போது நமது மாநிலம் அதிகப்படியான முதலீடுகளை பெறத்தொடங்கியுள்ளதால் , வேலைவாய்ப்புகளும் அதிகரித்தது வருகின்றன . இதனால் வர்த்தகர்கள் மற்றும் தொழில் முனைவோரின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். அவர்களின் பாதுகாப்பு மீறப்படுவதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று கூறியிருந்தார்.
இதுமட்டுமின்றி தொடர்ந்து கல்வி, சுகாதாரம், மருத்துவம் என பல்வேறு துறைகளில் வளர்ச்சிப்பணிகளை அரசு முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது. வேலை வாய்ப்புகளை பெருக்குவதே எங்களின் முதன்மை பணியாகும். இதற்கு முன்பு போலீசாருக்கு வீடு வசதிகள் இல்லை. ஆனால், தற்போது போலீசாருக்கு அதி நவீன வசதிகளுடன் குடியிருப்பு வசதிகள் கட்டப்பட்டு வருகின்றன. பெண் போலீசாருக்கும் குடியிருப்பு வசதிகள் செய்து தரப்படும் என்றும் பேசியிருந்தார்.
அதோடு நெடுஞ்சாலைகளும் விரைவுச்சாலைகளும் உத்தரபிரதேசத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன . இதுபோன்ற திட்டங்களால் மாநிலம் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று யோகி ஆதித்யநாத் பேசி இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில் ,அம்மாநிலத்தில் அரசுப் பேருந்து ஒன்று படிக்கட்டே இல்லமால் இயங்கி வருவதை வீடியோவாக எடுத்து இதுதான் உங்கள் உ.பி.யின் ஹைடெக் வளர்ச்சியா என்று டுவிட்டர் பக்கங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர் பார்த்தவர்கள் . அந்த பேருந்தில் , பயணிக்கும் பயணிகள் ஆபத்தான முறையில் இறங்கி ஏறுவதாக புகார் எழுந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
படிக்கட்டு வசதி இல்லாமல் இயங்கும் உ.பி.யின் ஹைடெக் அரசுப் பேருந்து…….
ரோல் மாடல்.. pic.twitter.com/eVd4EXkFaa
— Singaraj D (@CTenkasi) September 6, 2022
தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த பேருந்து குறித்த வீடியோ காணொளியை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் பார்வையாளர்கள்
இவனுங்க டிசைனே தனிதான் ,
படிக்கட்டு இருந்த தானே தொங்குவானுங்க ? கீழே விழுவானுங்க, அதான் குரங்கு குப்பன் இந்த ஐடியாவ செய்ஞ்சிருக்கான்,
அடேய் மொட்டையா படிய வித்துட்டியா ?
மோடி ஜி அங்கே லிப்ட் (lift) வைப்பதாக சொல்லி இருப்பார்.
என்று பல்வேறு நகைச்சுவை கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர் .
கழுத்தை அறுத்து வாயில் ஆசிட் ஊற்றிய தாய்மாமன் ! சிறுமிக்கு நேர்ந்த கொடுமை