Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்கோல்டு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு..

    கோல்டு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு..

    அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான கோல்டு திரைப்படமானது வருகிற டிசம்பர் 31-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது. 

    நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரைப்படம், பிரேமம். மூன்று பருவங்களில் நிகழும் காதல் கதையை மிகவும் அழகாக பிரேமம் திரைப்படம் காட்சிப்படுத்தியது. 

    மலையாளத்தில் வெளிவந்திருந்தாலும், இந்திய அளவில் பிரேமம் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக தமிழகத்தில் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக பிரேமம் ஓடியது. 

    மாபெரும் வெற்றிப் பெற்ற பிரேமம் திரைப்படத்தை, இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார். பிரேமம் திரைப்படத்திற்கு முன்பாக, இவரின் இயக்கத்தில் வெளிவந்த ‘நேரம்’ திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

    இப்படியாக நேரம், பிரேமம் என இரு வெற்றித் திரைப்படங்களை இயக்கிய அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பிறகு ‘கோல்டு’ திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படத்தில், பிரித்விராஜ், நயன்தாரா ஆகியோர் நடித்திருந்தனர். 

    இதைத்தொடர்ந்து. கோல்டு திரைப்படமானது கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டு அதன்படியே ரிலீஸானது. ஆனால், இத்திரைப்படமானது கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

    இந்நிலையில், கோல்டு திரைப்படமானது டிசம்பர் 31-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இலங்கைக்கு உதவிய இந்தியா; நன்றி தெரிவித்த அமைச்சர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....