இந்திய கடல் எல்லையைத் தாண்டியதாக 12 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் கீழகாசாகுடிமேடு பகுதியைச் சேர்ந்த வைத்தியநாதனுக்கு சொந்தமான விசைப்படகில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த 1-ம் தேதி வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் நேற்று நெடுந்தீவுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், இவர்கள் 12 பேரையும் கைது செய்தனர்.
இந்திய மீனவர்கள் பயணித்த விசைப்படகு இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவ அமைப்புகள், ‘கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க புதுச்சேரி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து விபத்து; பள்ளி மாணவர்கள் உள்பட 16 பேர் பலி!