Tuesday, May 7, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்புனித் ராஜ்குமார் முதலாமாண்டு நினைவு தினம்...கதையின் நாயகன் ‘அப்பு’ கடந்து வந்த பாதை...

    புனித் ராஜ்குமார் முதலாமாண்டு நினைவு தினம்…கதையின் நாயகன் ‘அப்பு’ கடந்து வந்த பாதை…

    புனித் ராஜ்குமார் : ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்துவிட்டு சென்ற மிகச்சிறந்த மனிதர்…பிறரை வாழவைத்து, அதன் வழியாக நாமும் வாழ வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் …மனிதநேய மிக்கவர்… கன்னட திரையுலகில் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரின் மகனாக இருந்தும் எல்லோரையும் எளிமையாக அரவனைத்துச் செல்லும் நல்ல பண்பாளர் …தன் திறமையால் பல வெற்றிப்படங்களை கொடுத்து கன்னட திரையுலகினரை மட்டுமல்லாது சாதாரண மக்களையும் கவர்ந்து அப்புவாகவே ஒவ்வொரு குடும்பங்களிலும் வாழ்ந்துவிட்டு சென்றவர் என பல பெருமக்களுக்கு சொந்தக்காரர் ஆவார் .அப்படிப்பட்ட புனித்ராஜ்குமார் அவர்கள் ,மறைந்து இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது.

    அவரது நினைவு நாளை ஒட்டி அவரது வாழ்க்கை குறித்த ஒரு சிறு தொகுப்பை நம் பதிவில் பார்க்கலாம்.

    கன்னடத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த ராஜ்குமார் – பர்வதம்மாள் தம்பதியினருக்கு ஐந்தாவது மகன் புனித்ராஜ்குமார். இவர் 1975-ம் ஆண்டு மார்ச் மாதம் 17-ம் தேதி சென்னையில் பிறந்தார். 

    2002-ம் ஆண்டில் ‘அப்பு’ என்ற திரைப்படத்தின் மூலம்  கதாநாயகனாக புனித் ராஜ்குமார் அறிமுகமானார். இருப்பினும், ஆறு மாத குழந்தையாக இருந்தபோதே பிரேமதா கனிகே என்ற படத்தில் புனித்ராஜ்குமார் தோன்றினார். 

    கன்னட திரையுலகில் அதிக சம்பளம் பெறுபவராக இவர் திகழ்ந்தார். இதுவரையில் 29 திரைப்படங்களில் புனித் நடித்துள்ளார். மேலும், கோடீஸ்வரர் என்ற நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கினார். 

    திரைப்படங்களின் வாயிலாக மட்டுமல்லாமல், பல தொண்டுகளை மக்களுக்காக செய்து அதன் மூலமும் மக்களிடையே நல்ல பெயரை புனித் பெற்றார். 

    இவர் அக்டோபர் 29-ம் தேதி 2021-ம் ஆண்டு காலையில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    புனித் ராஜ்குமாரின் மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சியடைய செய்தது. சாமானியர்கள் முதல் பிரதமர் வரை இவருக்கு அஞ்சலி செலுத்தினர். 

    இந்நிலையில், இன்றோடு புனித் ராஜ்குமார் மறைந்து ஓராண்டுகாலம் ஆகிறது. இதனால், ரசிகர்கள் பொதுமக்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து தங்களின் அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.

    puneeth_rajkuma

    மேலும், புனித்ராஜ்குமார், தனது கனவு படமான ‘கந்ததகுடி’ என்ற ஆவணப்படத்தில் நடித்து இருந்தார். அந்த படமானது நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    இதையும் படிங்க: திருமணமான ஒரே வருடத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்; புதுமண தம்பதிகளுக்கு சீன அரசு கொடுக்கும் நெருக்கடி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....