பாலினம் மாறிய ஸியா – ஸஹத் தம்பதிகளுக்கு மார்ச் மாதம் குழந்தை பிறக்கவுள்ள செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஸியா ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர். ஸஹத் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர். இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஸியா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு திருநம்பி தாயாகியிருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;
நான் பிறப்பால் பெண் இல்லை.. உடலாலும் பெண் இல்லை. ஆனால் என்னுடைய எண்ணம் நான் ஒரு பெண். எனக்குத் தயாக வேண்டும். ஒரு குழந்தை என்னை அம்மா என அழைக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. தற்போது ஸஹத் கருவுற்றிருக்கிறார். எட்டு மாதங்கள் எங்கள் கனவுகளை வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்.
எங்களது பயணத்துக்கு உற்றத் துணையாக இருப்பவர்களுக்கு நன்றி!
இவ்வாறு ஸியா இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.
ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் சிகிச்சையின்போது, ஸஹத் மகப்பேறு அடைந்தார். இதனால், அந்த சிகிச்சை தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. ஸஹத்துக்கு பிறப்பிலேயே கருப்பை இருந்ததால் இது நடந்தது என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்த பாலிவூட் பிரபலம்!