உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
2022-ம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதனின் ஒரு படிநிலையாக இன்று சிட்னியில் முதல் அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து அணியின் சார்பில் பின் ஆலென் மற்றும் டிவான் கான்வே ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
ஆனால், 4 ரன்களில் பின் ஆலென் ஆட்டமிழக்க அவரைத்தொடர்ந்து டிவான் கான்வே 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து, களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் 6 ரன்களில் வெளியேறினார். பாகிஸ்தானின் கையே தொடர்ந்து மேலோங்கி இருந்தது. பின்னர். நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் இணைந்து ரன்களை அதிகப்படுத்தினர்.
46 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வில்லியம்சன் பெவிலியன் திரும்பினார். இருப்பினும், மற்றொரு புறத்தில் சிறப்பாக விளையாடிய மிட்செல் அரைசதம் விளாசினார். மொத்தத்தில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆட்டக்களத்தில், டேரில் மிட்செல் 53 ரன்களுடனும், ஜேம்ஸ் நீஷம் 16 ரன்களுடனும் இருந்தனர்.
பாகிஸ்தான் அணி தற்போது 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.
இதையும் படிங்க: ஆண்ட்ரியாவின் அனல் மேலே பனித்துளி பாடலை வெளியிட்டு… புகழாரம் சூட்டிய கனிமொழி எம்பி