கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் இன்று முதல் நாக்-அவுட் சுற்றுகள் நடைபெறவுள்ளது.
நடப்பாண்டிற்கான சர்வதேச கால்பந்து உலகக் கோப்பை போட்டி, கத்தாரில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கப்பட்ட கால்பந்து உலகக் கோப்பை திருவிழா வருகிற 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. உலகெங்கிலும் இந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது அதிகளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை போட்டியானது தற்போது அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. நவம்பர் 20-ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வந்த லீக் சுற்று தற்போது முடிவடைந்துள்ளன.
இதைத்தொடர்ந்து, இன்று முதல் நாக்-அவுட் சுற்றுகள் நடைபெறவுள்ளது. இந்த நாக்-அவுட் சுற்றுக்கு மொத்தம 16 அணிகள் முன்னேறியுள்ளன.
அவைகளாவன;
பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல், நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டீனா, போலந்து, மொராக்கோ, குரோசியா, ஜப்பான், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, தென் கொரியா.
கால்பந்து உலகக் கோப்பை – விடாது துரத்தும் சர்ச்சையிலும் 220 பில்லியன் டாலர் செலவு செய்த கத்தார்..