Wednesday, May 1, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

    தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

    சென்னை: அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள பெரியாரின் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தமிழகத்தில் பெரியார் பிறந்த நாள் விழா செப்டம்பர் 17 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

    மேலும், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியாரின் பிறந்த தினம், சமூக நீதி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக நீதி நாள் கொண்டாட்டத்திற்கான உறுதி மொழிகள், அனைத்து அரசு அலுவலகங்களிலும் எடுக்கப்பட்டு வருகிறது. 

    இதையும் படிங்க :‘அடுத்தவர் சாதனைக்கு தங்கள் அட்ரஸை ஒட்டும் திமுக’ – பாஜக அண்ணாமலை

    இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா சாலையில், சிம்சன் அருகில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தும் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பெரியாரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    மேலும், தமிழகம் முழுவதிலும் உள்ள பெரியார் சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....