512 கிலோ வெங்காயத்தை வெறும் 2 ரூபாய்க்கு ஒரு விவசாயி விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர துக்காராம் சவான் என்ற விவசாயி தான் அறுவடை செய்த 512 கிலோ வெங்காயத்தை விற்றுள்ளார். இருப்பினும் அத்தனை கிலோ வெங்காயத்தை விற்றவருக்கு கிடைத்த பணம் வெறும் 2 ரூபாய் மட்டும் தான்..
கடந்த ஆண்டு ஒரு கிலோ வெங்காயத்தை 20 ரூபாய்க்கு விற்றதாகவும், இந்த ஆண்டு விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிந்ததாகவும், விவசாயி ராஜேந்திர துக்காராம் சவான் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ வெங்காயத்துக்கு வெறும் ஒரு பாய் கொடுத்ததாகவும், அதில் வணிகர்கள், போக்குவரத்து செலவு, கூலி, எடைக் கட்டணம் என 512 ரூபாயில் இருந்து 509.50 ரூபாயை கழித்து விட்டதாகவும் தெரிவித்தார்.
அதோடு அவருக்கு அனைத்துக் கட்டணங்களையும் கழித்துக் கொண்டு வெறும் 2.49 ரூபாயை மட்டும் கிடைத்துள்ளது. அதிலும் மார்ச் மாதம் தேதியிட்ட காசோலை 2 ரூபாய் என எழுதிக் கொடுத்துள்ளனர். காசோலை என்பதால் அந்த 49 காசுகளையும் குறைத்துவிட்டு வெறும் 2 என எழுதிக் கொடுத்துள்ளனர்.
அந்த 2 ரூபாயும் தனக்கு இப்போதைக்கு கிடைக்காது எனவும் அதற்காக 15 நாட்கள் காத்திருக்க வேண்டும் எனவும் விவசாயி ராஜேந்திர துக்காராம் சவான் வேதனை தெரிவித்துள்ளார்.
512 கிலோ வெங்காயத்தை வெறும் 2 ரூபாய்க்கு விவசாயி விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடங்கியது, ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் பணிகள்.. குஷியில் ரசிகர்கள்!