சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை-பம்பை இடையே இன்று முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் இருந்தும் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று முதல் சென்னையில் இருந்து பம்பைக்கு விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதன்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கும் 4 மணிக்கும் என இரு பேருந்துகள் பம்பய்க்கு இயக்கப்படுகின்றன.
இதில் பயணிக்கும் பெரியவர்களுக்கு 1090 ரூபாயும் சிறியவர்களுக்கு 545 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த அதிநவீன மிதவை சொகுசு பேருந்து சேவை வருகிற, ஜனவரி மாதம் 18 ஆம் தேதி வரை இந்த சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளின் இருக்கைகளை, www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல், பக்தர்கள் சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரியவர்களுக்கு ரூ.575, சிறியவர்களுக்கு ரூ.288 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சசிகுமார்…