Thursday, May 9, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்எத்தனை பேர் தலைமை வகித்தாலும் பாஜகவின் கைப்பாவைதான் அதிமுக - ஈவிகேஎஸ். இளங்கோவன்

    எத்தனை பேர் தலைமை வகித்தாலும் பாஜகவின் கைப்பாவைதான் அதிமுக – ஈவிகேஎஸ். இளங்கோவன்

    இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத மற்றும் ஆதிக்கம் செலுத்தி வரும் அரசியல் சக்தியாக ஜவாஹர்லால் நேரு-இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என வழி, வழியாக ஒரு அரசியல் குடும்பம் கோலோச்சி வருகிறது. அந்த குடும்பத்தின் நான்காம் தலைமுறை தலைவரான ராகுல் காந்திக்கு 51-வது பிறந்தநாள் விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இதில்,தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் கேக் வெட்டினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:

    அடுத்த தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென மோடியும், அமித்ஷாவும் கனவு கண்டுவருகின்றனர். ஒருவேளை அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்திய துணைக் கண்டமே இல்லாமல் போய்விடும். எனவே, ஜனநாயகத்தையும் மக்களையும் காப்பாற்ற நாம் களம் இறங்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறி, அக்னி பாதை திட்டத்தை மோடி கொண்டு வந்துள்ளார். இத்திட்டத்தை எதிர்த்தால்தான் இந்தியாவுக்கு வருங்காலம் உண்டு. மீண்டும் மோடி அரசு வராமல் தடுக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

    தமிழகத்தில் எதிர்க்கட்சியாக வரவும், வலுவாக கால் ஊன்றவும் கோடிக்கணக்கில் பாஜக செலவு செய்கிறது. இதை எல்லாம் முறியடிக்க வேண்டும். பாஜகவை தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும். தமிழகத்தில் பாஜக கால் ஊன்றாமல் இருக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதிமுக இரண்டாக உடைய பாஜகதான் காரணம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக விவகாரங்களில் பாஜக தலையிட்டுக் கொண்டிருக்கிறது. அதிமுகவை பொம்மைபோல ஆட்டுவித்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், ”ராகுல் காந்தி, சோனியா காந்தி மீது அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கை முழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கையே. இது மக்களுக்கு தெரியும். பாஜக தலைவர் அண்ணாமலை, போலீஸ் வேலையில் இருந்து ஏன் வெளியில் வந்தார் என தெரிவிக்க வேண்டும். அதிமுகவில் ஒற்றை, இரட்டை,மூன்று பேர் தலைமை என்று எத்தனை பேர் தலைமை வகித்தாலும் பாஜகவின் கைப்பாவையாகத்தான் அவர்கள் இருப்பார்கள். உலகம் உள்ளவரை காங்கிரஸ் இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது” என்றார்.

    ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்; சமத்துவ இந்தியாவை உருவாக்குவதற்கான அவரது தன்னலமற்ற அயராத உழைப்பை பாராட்டுகிறேன், காங்கிரஸ் கட்சியின் நெறிமுறைகள் குறித்து அவரது அர்ப்பணிப்பு முன்மாதிரியாக உள்ளது”. எனத் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கூட்டத்தினைத் தள்ளிவைக்க ஓபிஎஸ், இபிஎஸ்ஸிற்கு எழுதிய கடிதம்!! அடுத்து நடக்கப்போவது என்ன?!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....