முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு வேட்பாளர் செந்தில் முருகன் தேர்தலில் இருந்து வாபஸ் பெறுவதாக முன்னாள் அதிமுக அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை, பசுமை வழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பிறகு, அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், இரட்டை இலை சின்னம் வெற்றி பெறுவதற்காக தங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெறுவார் என்றும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்காக வாக்கு சேகரிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் எம்ஜிஆர் வெற்றி கண்ட இரட்டை இலை சின்னம் முடக்கப்படக் கூடாது என்பதே தங்களது நிலைப்பாடு என்றும், அதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய கு.ப.கிருஷ்ணன், இரட்டை இலை சின்னம் வெற்றி பெறுவதற்காக முழுமையாக பாடுபடப்போவதாக தெரிவித்தார்.
டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை; நிவாரணம் அறிவித்த முதல்வர்