ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுக வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான திருமகன் ஈ.வெ.ரா கடந்த 4 ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 18 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நேற்று ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திருமகன் ஈ.வெ.ரா தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதே சமயம் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் எஸ் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பினை அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிமனை திறக்கப்பட்டு வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இடைத்தேர்தல் பொறுப்பாளர் செங்கோட்டையன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த 2001 ஆம் ஆண்டு பிரிக்கபடாமல் ஒரே தொகுதியாக ஈரோடு இருந்தபோதும், அதன் பின்பு, ஈரோடு கிழக்கு தொகுதியாக பிரிக்கப்பட்ட பிறகு 2016 ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா vs நியூசிலாந்து; வீழ்ச்சியா? எழுச்சியா? – இன்று மூன்றாவது இருபது ஓவர் போட்டி!