Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாதிரி வாக்குப்பதிவு!

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாதிரி வாக்குப்பதிவு!

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான திருமகன் ஈ.வெ.ரா கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 18 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

    அதன்படி வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31 ஆம் தேதி முதல் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேசமயம், அரசியல் கட்சிகள் மும்முரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. 

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலுக்கான மாதிரி வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. வேட்பாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

    தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 238 வாக்குச்சாவடிகளில் 280 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றன. 

    பாடலாசிரியருக்கு விஜய் கொடுத்த அன்பு முத்தம்; வைரலான புகைப்படம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....