Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பாடலாசிரியருக்கு விஜய் கொடுத்த அன்பு முத்தம்; வைரலான புகைப்படம்!

    பாடலாசிரியருக்கு விஜய் கொடுத்த அன்பு முத்தம்; வைரலான புகைப்படம்!

    பாடலாசிரியர் விவேக், நடிகர் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இப்பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

    நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் தேதி வெளிவந்த படம் வாரிசு. பிரபல இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். தில் ராஜு இப்படத்தை தயாரித்திருந்தார். முழுக்க முழுக்க குடும்ப படமாக மட்டுமே வாரிசு இருக்கும் என முன்பே கூறப்பட்டது. படமும் அதன்படியே இருந்தது. 

    பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான வாரிசு படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிட்டியது. ஆயினும் படத்தின் வசூல் என்பது அதிகளவில் இருந்தது. குடும்பங்களின் ஆதரவு வாரிசுக்கு அதிகளவு கிடைத்தது என்றே சொல்லலாம். 

    இதுவரையில், வாரிசு ரூ. 350 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், வருகிற 22-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வாரிசு வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாடலாசிரியரும் வாரிசு படத்தின் துணை திரைக்கதை ஆசிரியரும், வசனகர்த்தாவுமான விவேக் நடிகர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அந்தப் புகைப்படத்துடன் அவர் பதிவிட்டுள்ள பதிவு சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    அதன்படி, ”சில உறவு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இந்த நம்ப முடியாத பயணத்தில் நீங்கள் என்னிடம் மூத்த சகோதரரைப் போல அன்பாகவும், ஆதரவாகவும் இருக்கிறீர்கள். என் கலைப் பயணத்தில் இந்த அழகான தருணத்தை எதனாலும் வெல்ல முடியாது. லவ்யூ தளபதி” என்று குறிப்பிட்டுள்ளார். இதை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

    முன்னதாக, வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசும்போது, பாடலாசிரியர் விவேக்கிற்குள் ஒரு இயக்குநர் இருப்பதாகவும் விரைவில் அவரை இயக்குநராக பார்க்கலாம் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; இன்று முதல் பெயர் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....