Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நிறைவு

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நிறைவு

    ரகசிய வாக்குசீட்டு முறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று (அக்டோபர் 17) மாலை 4 மணியுடன் நிறைவுபெற்றது. 

    காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தல் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. 

    நாட்டின் மிகப் பழமையான கட்சி என்ற பெருமைக்குரிய கட்சிக்காக காங்கிரஸ் திகழ்ந்து வருகிறது. அப்படிபட்ட கட்சியில் 6-வது முறையாக அக்கட்சிக்கான தலைவர் தேர்தல் போட்டி ஏற்பட்டிருக்கிறது. 

    இந்தத் தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாரும் போட்டியிடவில்லை. 

    24 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக் குடும்பத்தைச் சேராத நபர் ஒருவர் இன்று நடைபெறுகிற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான இந்தத் தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர்.

    தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து மொத்தம் 711 பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் ஆவர். அதில் 659 வாக்குகள் மட்டுமே இந்தத் தேர்தலில் பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 93 % வாக்குகள் பதிவாகியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது  

    இந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் முன்னதாக ப.சிதம்பரம், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட தலைவர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.  

    இந்நிலையில், ரகசிய வாக்குசீட்டு முறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று மாலை 4 மணியுடன் நிறைவுபெற்றது. 

    வாக்குப்பதிவு நிறைவுபெற்றதை தொடர்ந்து வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து, வாக்குப்பெட்டிகள் தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. 

    அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு, முடிவுகள் வருகிற 19 ஆம் தேதி அறிவிக்கப்படும். 

    இதையும் படிங்க: ராகுல் காந்தியை கேலி சித்திரமாக்கிய பாஜக..வெகுண்டு எழுந்த காங்கிரஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....