அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம், ஜெயன்கொண்டத்தில் இருந்து இன்று காலை தனியார் பேருந்து ஒன்று தஞ்சாவூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இந்தப் பேருந்து செந்துறை அடுத்த ராயம்புரம் அருகே சென்றுக்கொண்டிருந்தபோது, அங்குள்ள சிறிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்தப் பேருந்தில் பயணம் செய்த செந்துறை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த வேல் முருகன் மகனும் அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவரான கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில் சிக்கிய 51 பேர் மீட்கப்பட்டு அரியலூர் மற்றும் செந்துறை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிறுகளத்தூர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து செந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் கணக்கெடுப்பு